அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் செல்ல பிராணிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகள் நாய்களை பைகளில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் ரயில்களுக்குள் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது ஒரு கோல்களில் அடைக்கப்படாவிட்டால் எந்த ஒரு நபரும் எந்த ஒரு விலங்குகளையும் எந்த ஒரு பொது போக்குவரத்திலும் கொண்டுவரக் கூடாது என்பதாகும். இதை அடுத்து விதிகளில் இருக்கும் ஓட்டையை கண்டுபிடித்த பயணிகள் செல்லப்பிராணிகளை தங்கள் பைகளுக்குள் போட்டுவிட்டு எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.