தேசிய அளவிலான கேலோ இந்தியா இலங்கை விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக சாலை, திருத்தணி திருவள்ளூர் சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று மீண்டும் அரங்கத்தை வந்தடைந்தனர். மாரத்தான் போட்டியில் சுமார் 300 பேர் பங்கேற்றனர்.