தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சந்திரமுகி -2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கடைசி நாள் படப்பிடிப்பின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து கங்கனா மும்பையிலுள்ள தன் வீட்டை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்த வீடியோவை அவர் தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் வீட்டின் வெளியில் கங்கனா வைத்திருக்கும் அறிவிப்பு பலகையானது பேசுப்பொருளாகியுள்ளது. அதாவது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர்பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என எழுதப்பட்டு உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் அடிப்படையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.