இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 81 லட்சம் கோடி மதிப்புக்கு UPI பரிவர்த்தனைகள் நடந்திருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில்தான் 40% அதிகமான பணம் செலுத்தப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 10-15 ஆண்டுகளில் UPI பரிவர்த்தனை 100 பில்லியனை தொடும் எனக் கூறப்படுகிறது.

இது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 37 % அதிகமாகும். இதன்படி UPI வழியே ஒரு வினாடிக்கு 3729.1 முறை பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றனர். 2022-ம் ஆண்டு இந்த பணபரிமாற்றம், ஒரு விநாடிக்கு 2,348 முறை என்ற அளவில் இருந்து, நடப்பு ஆண்டில் இந்த பணபரிமாற்றம் 58% அதிகரித்து உள்ளது.

இதேபோன்று, கடந்த ஜூலையில் ரூ.20.6 லட்சம் கோடி அளவிலான பணபரிமாற்றம் நடந்துள்ளது,  இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவாகும். இதுதவிர தொடர் 3 மாதங்களில் ரூ.20 லட்சம் கோடிக்கு அதிகமாக பணபரிமாற்றங்கள் நடந்து உள்ளன.