துலாம் ராசி அன்பர்களே..!
இன்று கொடை வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாக இருக்கும்.

தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். விட்ட பணியை செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சிறிதளவு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.

உதவிகள் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கவனமாக எதிலும் ஈடுபடுங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.