பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா துலிபாலா. இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், சோபிதா துலி பாலாவும் காதலிப்பதாக சமீப காலமாக கிசுகிசுக்கள் வருகிறது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் கூட அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா உடன் காதல் பற்றிய தகவல்களுக்கு தற்போது நடிகை சோபிதா விளக்கம் கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, என்னைப் பற்றி காதல் வதந்திகள் பரவுகிறது. யார் ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது தவறு இல்லாத போது அதற்கு உடனடியாக விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் மீது தவறு இல்லாததால் பயப்பட வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. நான் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வெற்றி படத்தில் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று கூறினார்.