
பலருக்கும் சொந்த வீடு வாங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டவும், வாங்கவும் முடியும். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும். வங்கி உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு உங்கள் கடன் மதிப்பை வங்கிகள் சரிபார்க்கும்.
அப்போது உங்கள் கடன் மதிப்பெண் நன்றாக இருந்தால் கடன் உடனடியாக கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் சில தவறுகள் காரணமாக உங்கள் கடன் மதிப்பெண் குறைந்து அதனால் வங்கி உங்களுக்கு கடன் வழங்காமல் போய்விடும். எனவே சில தவறுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
சரியான நேரத்தில் EMI செலுத்தாமல் போகும் தவறை சிலர் செய்கின்றனர். அது மிகப்பெரிய தவறு. உங்கள் தற்போதைய கடன் அல்லது கிரெடிட் கார்டு இ எம் ஐ தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு பிரச்சனையாக மாறிவிடும். உங்கள் இஎம்ஐ தொகையை செலுத்துவதில் 30 நாட்கள் தாமதமாகிவிட்டால் உங்கள் கடன் மதிப்பெண்ணில் இருந்து 50 முதல் 100 புள்ளிகள் வரை குறைந்து விடும்.
அதனால் உங்கள் EMI தொகையை சரியான நேரத்தில் செலுத்தினால் இந்த பாதிப்பு உங்களுக்கு இருக்காது. இல்லையென்றால் நீங்கள் வங்கியில் கடன் வாங்க வாங்குவது சிரமமாகிவிடும். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தாலும் கிடைக்காது.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே வாங்கி உள்ள கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் கட்ட வேண்டும். உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் அதனுடைய வரம்பிற்கு கீழே செலவு செய்வது நல்லது.
அதை போன்று ஒரே நேரத்தில் பல இடங்களில் கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் கடன் சுமையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் வங்கிகளில் வீட்டு கடன் வாங்குவது எளிது.