
அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாநிலத்தை சேர்ந்த ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்ற பிரபல குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேதி, நம்மில் பலர் கவனிக்காமல் விட்டுவிடும் படுக்கை அறையின் 3 ஆபத்தான பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது படுக்கை அறை என்பது ஒருவருக்கான ஓய்விடம், தூக்கத்திற்கான நிம்மதியான இடமாக இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஆனால், சில பொருட்கள் அந்த அமைதியையே கெடுத்து உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கக்கூடியவை என அவர் கூறுகிறார். இதன் விளைவாக தூக்கத்தின் தரம் குறையும், அலர்ஜி மற்றும் நீண்டகால உடல்நல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. அவை என்னவென்றால்:
1. பழைய தலையணைகள் (Old Pillows):
தலையணைகள் தினமும் நாம் பயன்படுத்தும் இடமாகும். உடலில் இருந்து வரும் எண்ணெய், வியர்வை, தும்மல் மற்றும் தோல் துகள் இவற்றால் அவை மாசாகி விடுகின்றன. அதில் கீறல்களும், பாக்டீரியாக்களும், பூச்சிகளும் தேங்கி பெருகும் சூழலை உருவாக்குகிறது. வெளியே பார்க்க சுத்தமாக இருந்தாலும், உள்ளே அதே சுத்தம் இருக்காது என்பதையே டாக்டர் சௌரப் வலியுறுத்துகிறார்.
அவர் அறிவுரையின் படி, ஒவ்வொரு 1-2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலையணையை மாற்றவும். ஹைப்போஅலர்ஜிக் மெட்டீரியல் அல்லது கழற்றி கழுவக்கூடிய கவர் பயன்படுத்துவதால் சில அளவு பாதுகாப்பு கிடைக்கும்.
2. செயற்கை வாசனை திரவங்கள் (Synthetic Air Fresheners):
பலர் தங்களது அறையில் வாசனை திரவியங்களை அல்லது ஸ்ப்ரேவுகளைப் பயன்படுத்தி ஒரு நல்ல வாசனையை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் இவை பலவிதமான ரசாயனங்களால் உருவாக்கப்படுகின்றன.
இதில் முக்கியமாக ‘Phthalates’ எனப்படும் ரசாயனம், ஹார்மோன் மாற்றங்கள், குடல் பிரச்சனைகள் மற்றும் ஆஸ்தமாவை உருவாக்கக் கூடியது. அதிகமான VOCs (Volatile Organic Compounds) வெளியேறும் போது மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் இருதய செயல்பாடு பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
3. பழைய மெத்தைகள் (Worn-out Mattresses):
அதாவது கிட்டத்தட்ட 7-10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மெத்தைகள் உடல்நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மெத்தையின் உள்ளே வியர்வை, தூசி, பூச்சிகள், பாசி போன்றவை தேங்கி அதன் தரத்தையே பாதிக்கும். இதனால் முதுகு வலி, புண்ணாக்கம் மற்றும் உடல் சோர்வு உருவாகலாம்.
மருத்துவரின் பரிந்துரையின்படி, மெத்தைகளை சரியான கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். இது தூக்கத்தின் தரத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த உதவுகிறது.