பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து சட்டவிரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.

இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ க்கு உளவு பார்த்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அவரை தீவிரமாக  கண்காணித்து வந்த நிலையில் நேற்று கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்தியது விசாரணையில், ஐஎஸ்ஐ முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்க்க ஆட்களை சேர்க்க முயன்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.