தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசியதாவது, “அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது.

ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை கூறியது கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால், அங்கு நடைபெறும் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தோற்கும். என்னோட தாய் 100 மடங்கு, மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என்று சொல்கிறார். இவரை யார் கேட்டது..? ஓபிஎஸ் (அ) வேறு யாராவது பா.ஜ.க-வை பேசினார்களா? இவ்வாறு அம்மாவை தவறாக பேசிய விவகாரம் குறித்து கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிடும். அங்கு உள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள். உங்களை கீழ்பாக்கத்திலோ (அ) பெங்களூர் நிமான்சிலோ பரிசோதித்துக்கொள்ளுங்கள்” என்று பேசினார்.