
சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவி வரும் ஒரு காணொளி, மனிதநேயத்தின் அழகான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 93 வயதான தம்பதியர் ஒருவர் தங்க நகைக் கடைக்கு வந்து, மனைவிக்கு மாலை வாங்க விரும்புகிறார். தனது மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை காணவேண்டுமென்பது ஒரே நோக்கமென, தந்தையின் நிலைமையைப் புரிந்த கடைக்காரர் எடுத்த முடிவு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
View this post on Instagram
வீடியோவில், வயதான தாத்தா ஒருவர் தன் மனைவியுடன் நகைக்கடைக்கு வருகிறார். மனைவிக்கு ஒரு மாலை வாங்க விரும்புவதாக தெரிவித்து, அதன் விலை எவ்வளவு எனக் கேட்டபோது, கடைக்காரர் அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என நெகிழ்ந்த குரலில் கேட்கிறார். தாதா, மிகவும் எளிமையாக, தன்னிடம் ₹1,100 மற்றும் சில நாணயங்கள் உள்ளதாக கூறுகிறார். இது அவருடைய முழுச் சேமிப்பாகும்.
தாதாவின் நிலையை உணர்ந்த கடைக்காரர், அவர் கொடுத்த பணத்தை ஏற்க மறுக்கிறார். மாறாக, மாலை மற்றும் காதணிகளை இலவசமாக வழங்குகிறார். தாதா பணம் தரத் திட்டிய போதும், கடைக்காரர் மிதமான சிரிப்புடன், “உங்களுடைய மற்றும் பாண்டுரங்கப் பெருமானின் ஆசீர்வாதங்கள் எனக்கு மிகப்பெரிய சொத்து” என கூறி அந்த தருணத்தை மறக்க முடியாத நினைவாக மாற்றினார்.
இந்த காணொளி @indiaink_insights எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதும், சில மணி நேரத்திலேயே 4 மில்லியனைத் தாண்டிய பார்வைகள் கிடைத்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தாதாவின் எளிமை மற்றும் கடைக்காரரின் கருணைமிக்க செயலால் மிகவும் நெகிழ்ந்தனர்.
பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு, “இவர்கள் தான் சமூகத்தின் உண்மையான செல்வம். தாத்தா மற்றும் கடைக்காரர் இருவருக்கும் வணக்கம்” எனக் கூறியிருக்கின்றனர். மேலும் ஒருவர், “கடவுள் எல்லா வடிவங்களிலும் வருகிறார். அந்த கடைக்காரர் உண்மையில் தங்க இதயம் கொண்டவர்” என பாராட்டியுள்ளார்.
இத்தகைய நிகழ்வுகள், நம் சமூகத்தில் இன்னும் மனிதநேயம் உயிருடன் உள்ளதையும், சிறிய செயல் கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் தெளிவாக காட்டுகின்றன.