
இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் வருவாயை அதிகரிக்க பங்குச்சந்தையை நோக்கி செல்கின்றனர். இருப்பினும் அவர்கள் நிலையான வருமானம் வரும் முதலீட்டு திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி போஜனா (எஸ்எஸ்ஒய்) மற்றும் தபால் அலுவலக வைப்புத் தொகை போன்ற சிறுசேமிப்பு திட்டங்கள் நிலையான வருமானத்தை தருகிறது. அதோடு இந்த திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறித்து காணலாம்.
சேமிப்பு டெபாசிட்: 4 %
1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 %
2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 %
3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.1 %
5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 %
5-ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.7 %
தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC): 7.7 %
கிசான் விகாஸ் பத்திரம்: 7.5 %(115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 %
சுகன்யா சம்ரித்தி கணக்கு: 8.2 %
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2 %
மாதாந்திர வருமானக் கணக்கு: 7.4 %.
சிறு சேமிப்புத் திட்டங்களில் சேவிங் டெபாசிட், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டம் என 3 பிரிவுகள் உள்ளன.