மக்களவையில் நேற்று பேசிய பாஜக எம் பி அனுராக் தாகூர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே குடும்பத்தினர் வக்பு சொத்துக்களை ஆக்கிரமித்து உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இன்று பேசிய மல்லிகார்ஜூனே கார்கே கூறியதாவது, அனுராக் தாகூர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலக தயார்.

இல்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜூ, “உங்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறோம்” என்று சமாதானம் செய்தார். இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவுரை கூறினார். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.