தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கன்னியாகும,ரி நெல்லை, தென்காசி, தேனி ,திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைப் போலவே நாளை குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஐந்தாம் தேதி வரை நீலகிரி, கோவை . தேனி,  திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.