தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.