
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று தொழிலாளியின் மகளான அக்ஷிதா (4) என்ற சிறுமி கட்டிடத்தின் 5-வது மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி அவர் 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ய செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.