தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திசையன்விளை பேரூராட்சி மன்றத்தின் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தால் நாங்களும் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிப்போம். நாங்கள் தேசிய கட்சி. எங்கள் கட்சியின் தலைமை இன்னமும் அதிமுகவின் தலைமையுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் கூட்டணியை  விட்டு வெளியே அனுப்புவதற்கான வேலையை அதிமுக செய்து கொண்டிருக்கிறது. பாஜக 4 வருடங்களாக ஆட்சி செய்தது பாஜகவின் ஆதரவினாலும் மோடியின் தயவினாலும் தான். மட்டும் இல்லையென்றால் அதிமுக கட்சியே காணாமல் போயிருக்கும். மேலும் வளர்த்து விட்டவர்கள் இன்று எங்களின் மார்பில் பாய்கிறார்கள் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.