மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இன்றுதிமுக கூட்டணி தொகுதி நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து பல கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்அதிமுக- பாமக இடையிலான கூட்டணி நாளை மறுநாள் இறுதியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பாமக பாஜக உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி அமைப்பதில் பாமகவின் நிலைப்பாடு நொடிக்கு நொடி மாறுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்று மாலை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது