தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் (22). இவர் தற்போது குறும்படங்களை இயக்கி வருகிறார். இதனால் கோலிவுட் சினிமாவில் விரைவில் ஜேசன் இயக்குனராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சஞ்சய்க்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு சஞ்சய்க்கு வாய்ப்பு சென்றுள்ளதாம்.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நேரம் மற்றும் பிரேமம் போன்ற படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் சஞ்சையை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசை பட்ட நிலையில் அந்த வாய்ப்பை சஞ்சய் நிராகரித்துவிட்டார். இதனால் தற்போது உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சஞ்சய் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாவாரா அல்லது ஹீரோவாக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.