திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் கருணா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் திருத்தணி அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர், அந்த சிறுமியை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.