திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார்.

அருணா ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் . இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மந்தத்துடன் பிரதீப்பும், அருணாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சிவந்திபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் செல்வ பிரகதீஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் அருணா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அதனால் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டு கணவருடன் வீட்டிற்கு வந்த பின் உணவருந்தினர். அதன்பின் வீட்டிலிருந்த அனைவரும் தூங்கி நிலையில், அருணா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை பிரதீப் எழுந்து பார்த்தபோது அருணா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக உதவி கலெக்டர் அருணா தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.