
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸில் குரலரசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் குரலரசிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
உடனே ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் வித்யா குரலரசிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் குரலரசிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து குழந்தையும், தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இக்கட்டான சூழ்நிலையில் தாயையும், சேயையும் நலமுடன் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் வித்யாவுக்கும், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷ் குமாரையும் குறளரசியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.