
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். இவர் திமுக கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பாளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் அலுவலக வளாகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மேடைக்கு வந்த கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அனைவரும் கமல்ஹாசன் உடன் புகைப்படங்கள் எடுத்தனர்.
அப்போது தொண்டர் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த வாளை கமலிடம் கொடுத்து புகைப்படம் எடுக்க முயன்றார். ஆனால் அதை வாங்க மறுத்த கமல்ஹாசன் கோபத்தில் அதை கீழே வைக்கச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தத் தொண்டரிடம் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.