பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்குகிறது. இந்த கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் புத்தகங்களை அச்சிட்டுப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழகம் முழுவதும் விற்பனை மையங்களில் விற்கப்படுகிறது.

இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 8 புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இந்த புத்தகங்கள் 10-ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு 120 ரூபாய்க்கும், கணித தீர்வு புத்தகம் 175 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு 140 ரூபாய்க்கும், கணித தீர்வு புத்தகம் 160 க்கும், கணித COME புத்தகம் 160 ரூபாய்க்கும், இயற்பியல் தீர்வு புத்தகம் 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.