உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கைசர்பாக் மீன் மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16, 2025) பரபரப்பான தெருவில் பெரிய மரம் ஒன்று விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பயங்கரமான காட்சிகள், விழுந்த மரத்துடன் சேதமடைந்த வாகனங்களையும், சிதறிக்கிடக்கும் இடிபாடுகளையும் காட்டுகின்றன.
முதற்கட்ட தகவல்களின்படி, பெரிய அளவிலான இந்த மரம் திடீரென விழுந்ததில், வாகனங்கள் மற்றும் கடைகள் நசுங்கியதாகத் தெரிகிறது.
लखनऊ थाना कैसरबाग के मछली मंडी के पास गिरा पेड़ कई लोगों की दबे होने की सूचना pic.twitter.com/meoq2bcihF
— Mohammad Imran (@ImranTG1) September 16, 2025
சம்பவம் நடந்த உடனேயே, தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக மீட்பு பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
#WATCH | Uttar Pradesh: One person died and four others were injured after a tree fell near the fish market in the Kaiserbagh police station area in Lucknow. Rescue operation is underway. pic.twitter.com/H6JUnCqsAU
— ANI (@ANI) September 16, 2025
லக்னோ காவல்துறையின் கூற்றுப்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மரத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர்.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, விழுந்த அரச மரம் மிகவும் பழமையானது என்பதால், பலவீனமடைந்து திடீரென விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
