சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாணவர் ஒருவர் திடீரென மைதானத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.