
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி அன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதாவது வெள்ளை மாளிகையின் ஊடகத் துணைச் செயலாளராக இந்திய வம்சாவழியை சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளருமான குஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக குடியரசு கட்சியின் கடந்த 2024 தேசிய மாநில மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குனராகவும், அயோவா மாகாண குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.