குழந்தைகள் எப்பொழுதுமே ஆர்வம் உள்ளவர்களாகவும், எதையாவது செய்து கொண்டே இருப்பவர்களாகவும் இருப்பார்கள். அதனால் கீழே விழுதல், தீக்காய்கள் அல்லது ஆபத்தான இடங்களில் சிக்கிக் கொள்ளுதல் போன்றவை சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன.

எனவே குழந்தைகளின் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்துக் கொண்டு இருப்பது அவசியமாகிறது. இதனை எடுத்துக்காட்டு விதமாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறிய குழந்தை ஒன்று லிப்டின் கதவு அருகே நின்று விளையாடிக் கொண்டுள்ளது. அந்த குழந்தையின் தாய் போனை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.

திடீரென லிப்டின் கதவுகள் திறந்ததும் போனை பார்த்துக் கொண்டே குழந்தையை கவனிக்காமல் தாய் வெளியே செல்ல முயற்சிக்கிறார். அப்போது கதவருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கை லிஃப்ட்டின் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.

உடனே லிஃப்ட்டை அந்தப் பெண் நிறுத்த முயற்சிக்கும்போது அது செயல்படவில்லை. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் அந்தப் பெண்ணிற்கு எதிராக பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.