மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதலிக்கு காதலன் மாங்கல்யம் கயிறை கட்டிய போது, கூடி இருந்த நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் என அனைவரும் சேர்ந்து மணமக்களுக்கு புத்தாண்டு மற்றும் திருமண வாழ்த்துகள் கூறி அட்சதை தூவி வாழ்த்தினர்.

உலகெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு எங்களுடைய திருமணம் நடந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைபோல என்றும் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். மீனாட்சி அம்மனின் தரிசனத்தோடு எங்களுக்கு திருமணம், புத்தாண்டு நாளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.