
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கட்டா குஷ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சூரியுடன் இணைந்து ‘மாமன்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகையை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, என்னிடம் நிறைய பேர் இந்த கேள்வியை கேட்கிறார்கள். உங்களுக்கு சூரி சாறுடன் நடிக்க ஓகேவா என்று, ஏன் அப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சூரி சார் மாதிரி ஒருவருடன் நடிப்பது எனக்கு பெருமை.
ஏனென்றால் அவ்வளவு பெரிய உயரத்தில் அவர் இருக்கிறார். நீங்கள் எந்த சூப்பர் ஸ்டார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இணையான உயரத்தில் சூரி சார் இருக்கிறார். அவ்வளவு நேர்மையான மனிதர், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று கூறினார்.