
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் சிரிப்பும், சந்தோஷத்தையும் பரப்பும் வீரர்களில் முன்னணியில் உள்ளவர்கள் ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இவர்கள் இருவரும் அரச உடையில் நடித்த ஒரு நகைச்சுவை வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவிற்கு “இது மகாயுத்தம்… ஆனால் சிரிப்புக்கு மட்டும்!” என அவர்கள் தலைப்பு வைத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவில், ஷிகரும் சாஹலும் மகாபாரத கதாபாத்திரங்களை போலவே ராஜா மற்றும் அரசவைக் கவிஞர் தோற்றத்தில் நடித்து, பாசுரங்களை கூறும் பாணியில் பேசி நடித்துள்ளனர்.
View this post on Instagram
அவர்களின் நடிப்பும், வசனங்களும் காணொளிக்கே தனி ஹைலைட்டாக இருந்தது . அந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே இன்ஸ்டாகிராம், போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் தங்கள் நகைச்சுவை பாணியிலும் புகழ் பெற்ற இந்த இருவரும், ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமடைய இந்த வீடியோவின் வழியாக முயற்சி செய்துள்ளனர்.
ரசிகர்கள் “இதுதான் ரியலா ஓர் ‘எண்டர்டெயின்மென்ட்’” எனக் கூறி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். வீரர்களும் மகிழ்ச்சியை பகிர விரும்புகிறார்கள் என்பது இந்த வீடியோவை மையமாக வைத்து மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.