மழை வெள்ளத்தில் இருந்த தெருவின் நடுவில் உள்ள சாக்கடை குழியில் இருந்து மேலே வந்த நபர் ஒருவர், சட்டை இல்லாமல் நின்று கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதைச் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மே 13ஆம் தேதி வெளியாகிய இந்த வீடியோவில், பெயரின்றி காணப்படும் அந்த நபர், வெள்ளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மத்தியில் இருந்து எழுந்த அவர் கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Baba 0001 (@baaba_0001)

வீடியோவில், கன மழை பெய்ததால் மக்கள் கடைகளின் வாசலில் அடைக்கலம் புகுந்து நனைவதைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர். அந்த நேரத்தில், அதிர்ச்சி, சிரிப்பு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த நபர் கொரில்லாவை போல தனது மார்பை அடித்து, சத்தம் போட்டு, கொரில்லா நடையை மேற்கொள்கிறார். இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு ரீலா? என்ற கேள்விகள் நெட்டிசன்களை புரியாமல் வைத்துள்ளன.

இந்த வீடியோ தற்போது 58 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துகளும் பதிவாகியுள்ளன. சில நெட்டிசன்கள் அவரை “Aquaman” என அழைக்க, மற்றவர்கள் “The Undertaker” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். பலர் சிரிப்பு எமோஜிகளுடன் இந்த வீடியோவில் கலந்துகொண்டனர். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான சரியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இது இப்போது இணையத்தில் பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.