மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டிகா பகுதியில் உள்ள கடல்நீர்ப்பாய்வில் மீன்பிடிக்க சென்ற ஒரு மீனவனவருக்கு அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதாவது ‘நனி கோபால்’ என்ற த்ராலர் படகில் பயணித்த அவர், வலையில் சிக்கிய 29 தெலியா போலா வகை மீன்கள் மூலம் ஒரே இரவில் ரூ.33 லட்சம் சம்பாதித்துள்ளார்.

ஒவ்வொரு மீனும் 20 கிலோவுக்கும் அதிக எடையுடன் இருந்ததால், அவை மீன் சந்தையில் அதிக விலைக்கு ஏலம் போனது.  ‘தெலியா போலா’ எனப்படும் அந்த வகை மீன்கள் மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக, மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்க இந்த மீன்களின் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றுக்கு அதிக தேவை உள்ளது. இதனாலேயே, இந்த மீன்களுக்கு கடலோர சந்தைகளில் அதிக விலை கிடைக்கிறது

மீனவரின் அபூர்வமான இந்த மீன்பிடிப்பு இடம் தெரிந்ததும், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அந்த 29 மீன்களையும் ஒரு தனியார் நிறுவனம் மொத்தமாக ரூ.33 லட்சத்திற்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மீன்கள் விரைவில் ஏற்றுமதிக்காக அனுப்பப்பட உள்ளன என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் மீனவத் தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நம்பிக்கையையும், கடலின் இரகசிய வாய்ப்புகளையும் காட்டியுள்ளது.