
தெலுங்கானாவில் கல்குவத்தியில் சந்திரசேகர் ரெட்டி(44), கவிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி (15), விஸ்வன் ரெட்டி (10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு, மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.
அதன் பின் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரசேகர் ரெட்டி எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அதில் கடன் தொல்லையால் மகன், மகளைக் கொன்றுவிட்டு, அவர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.