கொல்கத்தாவில் மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். தாகூர்புகூர் சந்தை பகுதிக்குள் இயக்குனர் சித்தாந்த் தாஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது அவரும் காரில் இருந்த Tv பெண் நிர்வாகியும் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பொதுமக்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரபல சினிமா இயக்குனரை கைது செய்துள்ளனர்.