
கர்நாடகா மகராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக வந்த கர்நாடகாவை சேர்ந்த வாகனத்தை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் இந்தியில் பேசியதற்கு வாகனத்தில் இருந்த டிரைவர் நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சுங்கச்சாவடி ஊழியரும் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா முழுவதிலும் இந்தி பேசப்படுகிறது என அவர் கூறினார். இந்த வாக்குவாதத்தின் போது டிரைவர் சுங்கச்சாவடி ஊழியரின் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி ஒரே நாளில் 8 லட்சம் பேரின் பார்வைகளை பெற்று வைரலானது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Watch this video and decide who is waging a language war in India.
These BIMARU Hindi speakers are disgrace to the idea of India.
These BIMARU Hindi speakers are not Indian Nationalists, they are Hindi Nationalists.
#StopHindiImposition pic.twitter.com/AdrQfUrvMT
— PLE Karnataka (@PLEKarnataka) September 15, 2024