தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர்.

அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ பற்றியதும் தண்ணீரை வேகமாக ஊற்றி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

மேலும் அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை நல்ல வேலையாக உயிர் பிழைத்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் புரியாமல் வீட்டில் இருந்தவர்கள் குழம்பி உள்ளனர்.