மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 19 வயது பெண் மற்றும் வாலிபர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

அப்போது இடுகாட்டில் எரியும் சிதையில் காதலன் குதிக்க முயன்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இடுகாட்டுக்கு வந்த காதலன் எரியும் சிதையில் குதிக்க முயன்ற உள்ளார். இதையடுத்து அங்குள்ளவர்கள் அவரைப் பிடித்து இழுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.