
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின் முடிவுகள் வெளியானது. இதற்கிடையில் காரியாபட்டியில் உள்ள உறவினரான முன்னாள் எம்எல்ஏ சிவசாமி என்பவர் வீட்டில் ராகுல் தர்ஷன், தனது அண்ணன் திலக் தர்ஷனுடன் தங்கி இருந்தார். இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது திலக் தர்ஷன் எழுந்து பார்த்தபோது அருகில் தனது தம்பி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரைத் தேடிய போது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராகுல் தர்ஷனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.