உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா – நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்னும் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!
Related Posts
வடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read moreமண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read more