தமிழ்நாட்டில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றை எதிர்கால சந்ததியினருக்காக நிலைநிறுத்துவதிலும் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அன்று தமக்கு ஒதுக்கப்பட்ட இயற்கை வளங்கள் துறை சார்ந்த மானியக் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்தக் சந்திப்பின் போது, தமிழகத்தின் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் அரிய இயற்கைச் செல்வங்களுக்கும் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை வளங்களைச் சட்டவிரோதச் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்து, அவற்றை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்தி வளமான சூழலை உருவாக்குவதே அரசின் முக்கிய இலக்கு என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“>

 

முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் இந்தத் துறை, பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தொடர்ந்து பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.