தமிழக சுகாதாரத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் பல்வேறு புதிய திட்டங்களைச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். முதியோருக்கான இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யும் முன்னோடித் திட்டம் உள்ளிட்ட 115 அறிவிப்புகள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே இரத்தப் பரிசோதனை போன்ற அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளைப் பெற்றுக்கொள்ளும் ‘வீட்டு முறை மருத்துவப் பரிசோதனை’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வருமான வரம்பு எதையும் பார்க்காமல், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் சிறப்பு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ மையமாக ‘TN Medicity’ அமைக்கப்படவுள்ளது, இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை உலகளவில் உயர்த்தும். மாநிலம் முழுவதும் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன இனப்பெருக்க நல மையங்கள்  நிறுவப்படவுள்ளன.

“>

 

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 2,500 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.