உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள  மாலில் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீடியோவில் இளைஞர் ஒருவர் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவரிடம் கூர்மையான ஆயுதம் இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரும், அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். பெண்ணை தாக்கியதாகவும், மோதலின் போது கத்தி போன்ற ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை போலீசார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

மாலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.