இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய காமாக்யா – ஹவுரா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அதன் தூய்மையும் வசதிகளும் குறையாமல் இருப்பதைப் பார்த்து வெளிநாட்டுப் பயணி ஒருவர் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உயர்தர ரயிலில் பயணம் செய்த அனுஷா என்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி தனது பயண அனுபவத்தை சமூக வலைதளங்களில் காணொளியாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெருமளவில் கவனத்தைப் பெற்று வருகிறது.
ரயிலில் ஏறிய தருணத்திலிருந்தே தான் மிகவும் வியப்படைந்ததாகக் கூறியுள்ள அவர், விசாலமான கேபின், நவீன வடிவமைப்பு மற்றும் ஆறு மாதங்கள் கடந்த பிறகும் பளிச்சிடும் தூய்மை ஆகியவற்றைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, நீண்ட தூர ரயில் பயணங்களில் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படும் கழிப்பறைகளின் தூய்மை குறித்துப் பேசிய அவர், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிரத்யேகமான குளியலறை வசதி இருப்பதையும், அது மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மேலும், பயணத்தின் போது வழங்கப்பட்ட சுவையான உணவு முதல் நாளில் இருந்தது போலவே தரம் மாறாமல் இருந்ததாகவும், இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தனது 6 மாத பராமரிப்புத் தேர்வில் மிகச் சிறப்பாகத் தேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையும் காணொளியும் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வேயின் இந்த நேர்மறையான மாற்றத்தைப் பாராட்டிப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசு மக்களுக்கு உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அதே வேளையில், பொதுச் சொத்துக்களையும் இத்தகைய தூய்மையான பொது வசதிகளையும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டியது பயணிகளாகிய நமது முக்கியக் கடமை என்றும் நெட்டிசன்கள் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
See this Instagram video by @annu.sia https://t.co/aGHDkE21CQ
“>
