இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் அவரது ஓய்வு குறித்து பல்வேறு யூகங்கள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இது குறித்து மிக முக்கியமான அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் சூழலில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பிசிசிஐ செயலாளர், தேர்வாளர்கள் எனப்படும்தேர்வுக்குழுவினரின் திட்டங்களில் ரோஹித் சர்மா இருக்கும் வரை அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்ற செய்திகள் அண்மைக்காலமாக வெளியாகி வந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, லார்ட்ஸ் மைதானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பால்கனியில் கௌதம் கம்பீர் ஏதோ சைகை செய்து பேச, அதைக் கேட்டு ரோஹித் சர்மாவும் இதர பயிற்சியாளர்களும் கலகலப்பாகச்சிரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இருப்பினும், ரோஹித் சர்மாவின் தற்போதைய பேட்டி பார்ம் தேர்வுக்குழுவினரை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்ற கசப்பான உண்மை நிலவுகிறது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தொடர் தொடங்குவதற்கு முன்பே, தேர்வுக்குழுவின் சில உறுப்பினர்கள் ரோஹித் சர்மாவைச் சந்தித்து, தங்களின் எதிர்காலத் திட்டங்களில் அவர் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ரகசிய விவாதத்தில் கௌதம் கம்பீரும் உடனிருந்தார்.
Locked in, but enjoying the moment 💙#RohitSharma and #GautamGambhir share a laugh on the Lord’s balcony before India take the field for the series-deciding ODI. 👏#ENGvIND 3rd ODI 👉 SUN, 19th JULY, 2:30 PM on JioHotstar pic.twitter.com/FUCQX0HxTa
— Star Sports (@StarSportsIndia) July 18, 2026
“>
அதன் பின்னர் பிசிசிஐ உயர் அதிகாரிகளை ரோஹித் சர்மா அணுகிய பிறகே அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் அவர் பெரிய ரன்களைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
