மும்பை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் லிஃப்ட்டுக்குள், பெண் ஒருவர் அழைத்து வந்த செல்ல நாய் அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, குடியிருப்புவாசிகளிடையே பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூலை 16 அன்று, இந்தக் கட்டிடத்தின் லிஃப்ட்டிற்குள் மூன்று சிறுமிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இடைப்பட்ட தளம் ஒன்றில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்துக் கொண்டு அந்த லிஃப்ட்டிற்குள் நுழைந்துள்ளார். லிஃப்ட் கதவுகள் மூடி நகரத் தொடங்கிய சில கணங்களிலேயே, அந்த நாய் திடீரென அமைதியிழந்து ஆக்ரோஷமாக மாறத் தொடங்கினது. ஒரு கட்டத்தில் அந்த நாய் உள்ளே இருந்த சிறுமிகளை நோக்கிப் பாய்ந்து தாக்க முயன்றதால், லிஃப்ட்டுக்குள் இருந்த சிறுமிகள் பயந்துபோய் பீதியில் அலறியுள்ளனர். நாய் திடீரென ஆக்ரோஷமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளரான பெண், உடனடியாக அந்த விலங்கைத் தடுத்து நிறுத்திக் கட்டுப்படுத்தப் போராடினார்.
லிஃப்ட் அடுத்த தளத்தை அடைந்து கதவுகள் திறந்தவுடன், பயந்துபோன சிறுமிகளில் ஒருவர் வேகமாக வெளியேற முயன்றார். அப்போது அந்த நாய் மீண்டும் அச்சிறுமியை நோக்கிப் பாய்ந்து செல்ல முயன்றது. எனினும், நாய் சிறுமியை நெருங்குவதற்குள் அதன் உரிமையாளர் அதனைத் தீர்க்கமாகப் பிடித்துக் கட்டுப்படுத்தினார். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகச் சிறுமிகளுக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mumbai – A shocking incident occurred inside a lift of the Sheth Irene high-rise tower in Malad West, when a pet dog suddenly turned aggressive and tried to attack three young girls. CCTV footage that has now gone viral on social media, a woman entered the lift with her dog,… pic.twitter.com/vMNXlgsm9o
— NextMinute News (@nextminutenews7) July 17, 2026
“>
இருப்பினும், இந்த விபரீதச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் கவலையையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. லிஃப்ட் போன்ற குறுகிய பொதுப் பயன்பாட்டு இடங்களுக்குச் செல்லப்பிராணிகளை அழைத்து வரும்போது, முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பிற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
