திருமண விழா ஒன்றில் மணமகன் தனது புதுமனைவியைத் தவிர்த்துவிட்டு, திருமணத்தின் முதல் கேக் துண்டை தனது தாய்க்கு ஊட்டிய நெகிழ்ச்சியான மற்றும் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம் அடங்கிய காணொளி  தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பொதுவாகத் திருமண மேடையில் கேக் வெட்டியவுடன் மணமக்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்வதே வழக்கமாக இருக்கும் நிலையில், இந்தத் திருமணத்தில் மணமகன் செய்த காரியம் அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த வினோதமான மற்றும் பாசப் போராட்டம் நிறைந்த காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இது குறித்து ஒரு  பெரிய விவாதம் வெடித்துள்ளது. மணமகனின் இந்தச் செயலை ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது கருத்துக்களை மோதிக்கொண்டு வருகின்றனர். தாயின் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது சரிதான் என்று ஒரு தரப்பினரும், மணமேடையில் மணமகளைத் தவிர்த்தது தவறு என்று மற்றொரு தரப்பினரும் தங்களுக்குள் காரசாரமாக விவாதித்து வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.