கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி ஒருவர், திடீரென 5 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பெற்றோரை உலுக்கியுள்ளது. அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போதே இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கட்டட மேஸ்திரியை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய அந்த நபர், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
