உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், சொத்துப் பங்கீடு தொடர்பாக வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையிலேயே பெண்ணொருவரை அவரது கணவரின் அண்ணன் (ஜேஷ்ட்) செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறவுகளின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்த இந்தத் தாக்குதலின் போது, அங்கு இருந்தவர்கள் யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாக உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சுல்தான்பூர் காவல்துறையினர், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். வீடியோவில் உள்ள சம்பவம், ஜூன் 28-ம் தேதி சிவுகட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் நடந்தது என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
घरेलू बात विवाद में जेठ और बहू के बीच छिड़ा युद्ध, जेठ ने छोटे भाई की पत्नी को चप्पलों से पीटा।
इस झगड़े ने हिन्दू धर्म की एक रिवाज तोड़ी है, हमारे उत्तर प्रदेश का हिंदू समाज अपने छोटे भाई की पत्नी को नहीं छूता, लेकिन यहां छुआ भी और पीटा भी।
वैसे छोटे भाई की पत्नी भी कमजोर नहीं… pic.twitter.com/FCzVDkO0dM
— Abhimanyu Singh (@Abhimanyu1305) July 1, 2026
“>
வன்முறை தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், காவல்துறையின் இத்தகைய துரித நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.
