“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்பார்கள். ஆனால், தன்னை அணு அணுவாகச் செதுக்கி வளர்த்த சொந்தத் தந்தையையே கை நீட்டி அடித்ததாகப் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பெருமையாகப் பேசியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடலில் டாட்டூ குத்திக்கொண்டு, தன்னை ஒரு பெண்ணியவாதி (Feminist) என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண், “நான் என் அப்பாவை ஓங்கி அறைந்தேன்” என்று சற்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் திமிராகப் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

​தங்கள் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பிலேயே கழித்து, அடுக்கடுக்கான தியாகங்களைச் செய்த ஒரு தந்தைக்கு, அந்தப் பெண் செய்த இந்த துரோகச் செயல் நெட்டிசன்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெற்ற தந்தையின் மீது கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது பெண்ணியமே கிடையாது, வெறும் திமிர்!” என்று பலரும் அந்தப் பெண்ணை சமூக வலைத்தளங்களில் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர். பெற்றோர்களை மதிக்கத் தவறும் இக்காலத்துச் சில இளைஞர்களின் இத்தகைய போக்கிற்கு எதிராக ஒட்டுமொத்த நெட்டிசன்களும் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.